Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM

காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

கோவை நரசீபுரத்தில் இருந்து தாமனம்புதூர் செல்லும் வழியில், யானை தாக்கி இறந்தவர் சடலம் கிடப்பதாக நேற்று காலை வனத் துறைக்கு தகவல் கிடைத்தது.

வனவர் ஆஷிப் தலைமையிலான வனத் துறையினர் அவரது சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விசாரணையில், அவர் எல்ஐசி காலனியைச் சேர்ந்த கார்த்திக்(45) என்பதும், பெயின்டிங் தொழிலாளி என்பதும் தெரியவந்தது. மது அருந்திய நிலையில் சுற்றித் திரிந்த அவரை காட்டு யானை தாக்கியதில், பலத்த காயமடைந்து இறந்திருக்கலாம் என்று வனத் துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x