Published : 28 Jan 2021 07:16 AM
Last Updated : 28 Jan 2021 07:16 AM
இதேபோல, நைஜீரியா நாட்டில் உள்ள வெப்ப மண்டல வேளாண் நிறுவனத்தில், வாழை, மரவள்ளி, தட்டைப்பயறு, மக்காச்சோளம், சோயா பீன்ஸ், கருணைக்கிழங்கு ஆகிய பயிர்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து, இவ்விரு நிறுவனங்களும் ஒருங்கிணைந்து கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.குமார், நைஜீரியா வெப்ப மண்டல வேளாண் நிறுவன துணை இயக்குநர் டாஷியல் கெண்டான் ஆகியோர் கையொப்பமிட்டு, ஒப்பந்தம் பரிமாறிக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், வேளாண் பல்கலைக்கழக பதிவாளர் ஏ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தோட்டக்கலைத் துறை டீன் புகழேந்தி, வேளாண்மை டீன் கல்யாணசுந்தரம், பழ அறிவியல் துறைத் தலைவர் அனீசா ராணி, பேராசிரியர் துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT