Published : 28 Jan 2021 07:16 AM
Last Updated : 28 Jan 2021 07:16 AM
ஈஷா அவுட்ரீச் அமைப்பின் வழிகாட்டுதலில் இயங்கி வரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு, தமிழக அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது. ‘சிறந்த நிர்வாகத் திறன் படைத்த எஃப்.பி.ஓ’ என்ற பிரிவில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், முதல்வர் பழனிசாமியிடமிருந்து நிறுவனத் தலைவர் குமார் பெற்றுக்கொண்டார்.
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின் ஆலோசனைப்படி கடந்த 2013-ல் கோவையில் தொடங்கப்பட்ட வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தில், தொண்டாமுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 1,063 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அதில், 38 சதவீதம் பேர் பெண்கள். மேலும், 70 சதவீதம் பேர் சிறு, குறு விவசாயிகள்.
இந்நிறுவனம், தேங்காய், பாக்கு மற்றும் காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்து, லாபம் ஈட்டி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT