Published : 26 Jan 2021 03:18 AM
Last Updated : 26 Jan 2021 03:18 AM

கிராம சபைக் கூட்டத்தை நடத்தக் கோரி ஆட்சியர் முகாம் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத் தலைவர் கைது

திருச்சி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் முன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கைது செய்யப்பட்டார்.

குடியரசு தினத்தன்று(இன்று) கிராம சபைக் கூட்டத்தை நடத்த அரசு உத்தரவிடக் கோரி, திருச்சி காஜாமலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் முன் அமர்ந்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ம.ப.சின்னத்துரை நேற்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தைக் கைவிட அவர் மறுத்தார். இதையடுத்து, போலீஸார் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

போராட்டம் குறித்து ம.ப.சின்னதுரை, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அரசியல் கட்சிகளின் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், கிராமங்களின் முன்னேற்றத்துக்காக நடத்தப்படும் கிராம சபைக் கூட்டங்களை அரசு நடத்தாதது கண்டிக்கத்தக்கது. எனவே, கிராம சபைக் கூட்டத்தை நடத்துவது தொடர்பாக அரசு உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x