Published : 17 Jan 2021 03:14 AM
Last Updated : 17 Jan 2021 03:14 AM

புதுச்சேரியில் புதிதாக 16 பேருக்கு கரோனா மேலும் 2 பேர் உயிரிழப்பு

புதுச்சேரியில் நேற்று புதிதாக 16 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார் நேற்று தெரிவித்ததாவது:

புதுச்சேரி மாநிலத்தில் 2,146 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி யில் 8, மாஹேவில் 8 என மொத் தம் 16 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய தினம் காரைக்கால், ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை.

மேலும், புதுச்சேரி தவளக்குப்பம் அருகே புதுக்குப்பம் பகுதியைச்சேர்ந்த 60 வயது முதியவர், மாஹே வைச் சேர்ந்த 69 வயது மூதாட்டி என 2 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 642 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகி தம் 1.66 ஆக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இது வரை 38,611 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 114 பேரும், வீடு களில் தனிமைப்படுத்தப்பட்டோர் 172 பேரும் என மொத்தம் 286 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 22 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதனால் குண மடைந்தோர் எண்ணிக்கை 37,683 (97.60 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 5 லட்சத்து 32 ஆயிரத்து 468 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 4 லட்சத்து 89 ஆயிரத்து 402 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்றுமுடிவு வந்துள்ளது எனத் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x