Published : 17 Jan 2021 03:14 AM
Last Updated : 17 Jan 2021 03:14 AM

அமைச்சர் கந்தசாமி 7-வது நாளாக தொடர் போராட்டம் குடும்பத்தினர் சந்திப்பு

புதுச்சேரி

புதுச்சேரி துணைநிலை ஆளு நரை, கோரிக்கைகள் தொடர்பாக சந்திக்க அனுமதி கோரி சட்டப் பேரவை வளாகத்தில் 7-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்த அமைச்சர் கந்தசாமியை அவரது குடும்பத்தார் சந்தித்து பேசினர்.

புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தனது துறைசார்ந்த கோரிக்கைகளை நிறை வேற்றவும், அதுதொடர்பாக ஆளுநர் கிரண்பேடியை சந்திக்க அனு மதி வழங்கவும் வலியுறுத்தி கடந்த10-ம் தேதி முதல் சட்டப்பேரவை வராண்டாவில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார். 7-வது நாளாக நேற்றும் அமைச்சர் கந்தசாமி தனது போராட் டத்தை தொடர்ந்தார். பொங்கல் கொண்டாட்டத்தை தவிர்த்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள் ளார். அவரது உடல்நிலையை அவ்வப்போது மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தொடர் காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைச்சர் கந்தசாமியை நேற்று அவரது தாய், மனைவி, மகன்கள் சந்தித்து பேசினர். பின்னர் உடல்நிலையை கருத்தில் கொண்டுபோராட்டத்தை முடித்துக்கொள்ள அமைச்சரை வலியுறுத்தினர். அதை அமைச்சர் நிராகரித்துவிட் டதாக தெரிகிறது. இதனிடையே தொடர் போராட்டம் நடத்திவரும் அமைச்சரை காங்கிரஸ் தலைவர்ஏ.வி.சுப்பிரமணியன், ஐஎன்டியுசிரவிச்சந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து பேசினர். அமைச் சரின் போராட்டத்துக்கு ஆளுநர் உடனடியாக தீர்வு காணாவிடில் அமைச்சருக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்கப்போவதாக மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட சில அமைப்புகள் எச்சரித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x