Published : 17 Jan 2021 03:14 AM
Last Updated : 17 Jan 2021 03:14 AM

130 ஆண்டுகளை கடந்து உறுதியோடு நிற்கும் நோணாங்குப்பம் பழைய பாலம் செடிகளால் வலுவிழக்கிறது

புதுச்சேரி நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றின் குறுக்கே பிரெஞ்சுக்காரர்களால் 1888-ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய பாலம் உள்ளது. சுமார் அரை கிலோ மீட்டர் நீளத்தில் கட் டப்பட்ட நூற்றாண்டு பழமையான இப்பாலத்தின் ஸ்திர தன்மை கருதி, கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

பிறகு பிரெஞ்சு கட்டிடக் கலைக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் இப்பாலத்தில் சாலை செப் பனிடப்பட்டு கடந்த 2012 முதல் இலகுரக வாகனங்கள் சென்று வர பயன்படுத்தப்படுகிறது. பொதுமக்க ளும் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சுண்ணாம்பாறு படகு குழாமுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளும் இந்த பாலத்தின் மீது நின்றபடி இங்குள்ள அழகை ரசித்து விட்டுசெல்கின்றனர்.

தற்போது இதன் அருகில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் வழியாக முழுபோக்குவரத்து நடைபெறுகிறது. இந்த புதுப்பாலத்தில் விபத்து உள்ளிட்ட காரணங்களால் போக் குவரத்து நெரிசல் ஏற்பட்டால், பழைய பாலம் வழியாகத்தான் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

இப்படி பயனுள்ள இந்தப் பழைய பாலத்தின் இருபுறமும் பக்க வாட்டில் தூண்களில் பல்வேறு இடங்களில் அரச மரம், செடிகள் வளர்ந்துள்ளன. பாலத்தின் மீதும் புற்கள், எருக்கம் போன்ற செடிகளும் வளர்ந்துள்ளன. இதனால், பாலத்தில் விரிசல் ஏற்பட்டு, அதன் ஸ்திர தன்மை பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.

எனவே, பாலத்தை பராம ரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வ லர்களும் வலியு றுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x