Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

விமானநிலைய கழிப்பறையில் கிடந்த 399 கிராம் தங்கம் மீட்பு

திருச்சி: திருச்சி விமானநிலைய கழிப்பறையில் கிடந்த 399 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விமானநிலையத்தில் குடியேற்றப் பிரிவு அலுவலர்கள் அறைக்கு அருகிலுள்ள ஆண்கள் கழிப்பறையில் நேற்று முன்தினம் காகிதத்தால் சுற்றப்பட்ட ஒரு பார்சல் கிடந்தது. அதில் ரூ.20.29 லட்சம் மதிப்புள்ள 399 கிராம் எடையுள்ள தங்க நகைகள் இருந்தன. தகவலறிந்த சுங்க அதிகாரிகள் அவற்றைக் கைப்பற்றினர். பின்னர் அந்த தங்க நகைகளை கடத்தி வந்தவர் மற்றும் பதுக்கி வைத்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x