Published : 06 Jan 2021 03:14 AM
Last Updated : 06 Jan 2021 03:14 AM
திருச்சி: தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கூட்டமைப்பின் நிறுவனர்- தலைவர் பி.ஜெய்னுலாபுதீன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் அலாவுதீன், பொருளாளர் ஜாகீர் உசேன், துணைத் தலைவர் அன்சாரி, துணைப் பொதுச் செயலாளர் கமருதீன், திருச்சி மாவட்டத் தலைவர் இப்ராகீம், செயலாளர் ஜாகீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஜெய்னுலாப்தீன் கூறியது: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளதால், வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படும் வரை அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்.
நாட்டில் நிலவும் அனைத்துவித மூட நம்பிக்கைகளையும் ஒழிக்கும் நோக்கில், திருச்சியில் ஆக.1-ம் தேதி மாநிலம் தழுவிய மாநாடு நடத்தப்படவுள்ளது. எங்கள் அமைப்பு தேர்தல்களில் நேரடி பங்கேற்பும் இருக்காது, யாருக்காகவும் பிரச்சாரம் செய்யவும் மாட்டோம். தமிழகத்தில் அசாதுதீன் ஒவைசி கருத்து எடுபடாது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT