Published : 05 Jan 2021 08:23 AM
Last Updated : 05 Jan 2021 08:23 AM
மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் ரவி(45). சோலையழகுபுரம் மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் மேற்பார்வையாளராகப் பணிபுரிகிறார். அதே கடையில் பார் நடத்தியவர் வில்லாபுரம் டிஎன்எச்பி காலனியைச் சேர்ந்த ரவி(44). இவர்களுக்குள் பணம் கொடுக்கல், வாங்கல் இருந்துள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் ரவி பணியில் இருந்தார். அப்போது அவரிடம் பார் உரிமையாளர் ரவி உட்பட 4 பேர் பணம் கேட்டு தகராறு செய்து தாக்கினர். இதுகுறித்த புகாரில் ரவி உட்பட 3 பேரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸார் கைது செய்தனர்.
அதேபோல, பார் உரிமையாளர் ரவி அளித்த புகாரின்பேரில், டாஸ்மாக் மேற்பார்வையாளர் ரவி உட்பட சிலரை போலீஸார் தேடுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT