Published : 28 Dec 2020 07:17 AM
Last Updated : 28 Dec 2020 07:17 AM

மதுரை வந்த விமானத்தில் தங்கம் கடத்திய ராமநாதபுரம் பயணி

மதுரை: சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு மதுரை வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களிடம் சுங்கத் துறையினர் சோதனை செய்தனர். இதில் சந்தேகத்துக்கிடமான முறையில் இருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பயணி அறிவழகன் என்பவரின் உடமைகளை சோதனை செய்தனர். அவர் சிங்கப்பூரில் இருந்து வாங்கி வந்த தராசுக்கு அடியில் துளையிட்டு, சுமார் ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தியது தெரிய வந்தது. அவரைக் கைது செய்த சுங்கத் துறையினர் 350 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x