Published : 16 Dec 2020 03:15 AM
Last Updated : 16 Dec 2020 03:15 AM
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அகில இந்திய விவசாயிகள் சங்க போராட்ட ஒழுங்கிணைப்புக் குழு சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று முன் தினம் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், இரண்டாவது நாளாக நேற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நூதன முறையில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி தலைமையிலான விவசாய அமைப்புப் பிரதிநிதிகள், ஆட்சியர் அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து, கைகளைத் தட்டியபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரேஸ்கோர்ஸ் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட 58 பேரை கைது செய்தனர்.
முன்னதாக, சு.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். டிசம்பர் 16-ம் தேதி (இன்று) கணியூரில் உள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு, காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT