Published : 15 Dec 2020 03:15 AM
Last Updated : 15 Dec 2020 03:15 AM
பழநியில் தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில், கரோனா பர வலைத் தடுக்கும் விதமாக விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பழநி கிளைச் சிறையில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை பழநி குற்றவியல் நீதித்துறை நடுவர் ரகுபதிராஜா தொடங்கிவைத்தார்.
பழநி டி.எஸ்.பி. சிவா முன்னிலை வகித்தார். கரோனா பர வலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப் புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஊர்வலத்தில் ஏந்திச் சென்றனர். பழநி நகர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT