Published : 15 Dec 2020 03:15 AM
Last Updated : 15 Dec 2020 03:15 AM
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே மட்டப் பாறையில் காவலர் வீட்டின் பூட்டை உடைத்து 70 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மட்டப்பாறையைச் சேர்ந்தவர் முத்து ரமேஷ். இவர் விளாம்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிகிறார்.
திண்டுக்கல்லில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். இந்நிலையில், திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 70 பவுன் நகைகள், ரூ.35 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரிந்தது. இதுகுறித்து விளாம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மோப்பநாய் சோதனை, கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT