Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே நெகமம் பேரூராட்சி பகுதி சின்னேரிபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 21 மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு கான்கிரீட் கட்டிடம் கட்டப்பட்டது. இந்நிலையில், கட்டிடத்தின் மேற்பகுதியில் மழைநீர் தேங்கி, பக்கவாட்டு சுவர்கள் வழியாக பல இடங்களில் நீர் கசிவு ஏற்படுகிறது. இதனால் ஜன்னல் கம்பிகள், கதவுகள், கரும்பலகை, மாணவர்கள், ஆசிரியர்கள் அமரும் இருக்கைகள், மேசைகள் மற்றும் தளவாட பொருட்கள், தரைப் பகுதி ஆகியன சேதமடைந்துவருகின்றன. தற்போது மழை அதிகளவில் பெய்து வருவதால் கட்டிடத்தை சீரமைத்து தரவேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT