Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

விதிமீறல் சுங்கச்சாவடிகளை அகற்ற கோரி 28-ல் திமுக ஆர்ப்பாட்டம்

சென்னை

முன்னாள் மேயரும், சென்னை தெற்குதிமுக மாவட்ட செயலருமான மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேசிய நெடுஞ்சாலை கட்டணம் நிர்ணயித்தல் குறித்த மத்திய அரசின் சட்டம் 2008-ம் பிரிவு 8-ன்படி, மாநகராட்சி எல்லையில் இருந்து 10 கிலோ மீட்டருக்கு அப்பால் மட்டுமே சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட வேண்டும். ஆனால், விதிகளுக்குப் புறம்பாக மாநில அரசு சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பெருங்குடி, துரைப்பாக்கம் 200 அடி சாலை, சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி சாலை, சோழிங்கநல்லூர் - மேடவாக்கம் இணைப்பு சாலை மற்றும் உத்தண்டி ஆகிய பகுதிகளில் சுங்கச்சாவடிகளை அமைத்துள்ளது.

எனவே இவற்றை அகற்றக் கோரி வரும் 28-ம் தேதி சோழிங்கநல்லூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இதில் திமுக எம்பிக்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி மற்றும் திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்கவுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x