Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

புகையிலைப் பொருள் விற்ற 5 பேர் கைது

அரியலூர்: உடையார்பாளையம் உதவி ஆய்வாளர் மாசிலாமணி தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் இரவு அப்பகுதி கடைவீதிகளிலுள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். இதில், கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்ற சோழங்குறிச்சியைச் சேர்ந்த உலகநாதன்(45), தத்தனூர் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த தேசியப்பன்(43), சுத்தமல்லியைச் சேர்ந்த சேகர்(52), எட்வர்ட்ஸ்ராயர்(57), உடையார்பாளையம் மூர்த்தியான் தெருவைச் சேர்ந்த சரவணன்(39) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x