Published : 30 Oct 2020 03:14 AM
Last Updated : 30 Oct 2020 03:14 AM
கரூர்: தமிழ்நாடு மின்வாரிய பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பில், கரூர் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன் மின்வாரியத் தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கரோனா முடக்கக் காலத்தில் கடுமையான வேலை பளுவுடன் உழைத்து வருமானத்தைக் கொடுத்த மின்வாரிய தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், பகுதிநேர பணியாளர்கள் மற்றும் பொறியாளர்கள் அனைவருக்கும் போனஸ் உச்சவரம்பை மாற்றி 30 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் எனபது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் கரூர் மின் வட்ட கிளைத் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT