Published : 28 Nov 2021 03:06 AM
Last Updated : 28 Nov 2021 03:06 AM

கடந்த 24 மணி நேரத்தில் 8,318 பேருக்கு கரோனா தொற்று :

நாட்டில் நேற்று ஒரே நாளில் 8,318 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 8,318 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். பெருந்தொற்றால் பாதிக்கப்படு வோரை விட அதிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில்,நேற்று ஒரே நாளில் 10,967 பேர்வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் நாட்டில் தற்போது 1,07,019 பேர் மட்டுமே கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, சனிக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 465 பேர் வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,67,933 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா தினசரி பாதிப்பு விகிதம் 0.86 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 0.88 சதவீதமாகவும் உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

121.06 கோடி தடுப்பூசி

இந்நிலையில், நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 73.58 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது. இதனையும் சேர்த்து, இதுவரை121.06 கோடி தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித் துள்ளது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x