Published : 25 Nov 2021 03:12 AM
Last Updated : 25 Nov 2021 03:12 AM

இந்தி படத்தில் வந்தது போல... :

இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கி 2020-ல் வெளிவந்த இந்தி படம் ‘சோக்டு’ (Chocked). பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் மக்கள் பட்ட கஷ்டத்தை விளக்கும் இந்த படத்தில், அரசியல்வாதியின் பினாமி ஒருவர், வாடகை வீட்டு பைப் லைனில் ரூ.500 கட்டுகளை பதுக்கிவைப்பார். கழிவு நீர்க் குழாயில் அடைப்பு ஏற்பட்டு கீழ் வீட்டில் இருக்கும் ஹீரோயின் பைப்பை குத்திவிடுகிறார். கழிவு நீர் வெளியேறும் ஓட்டை வழியாக 500 ரூபாய் கட்டு வருகிறது. இதேபோல் கீழ் வீடு, பக்கத்து வீடு, தொட்டி என பல இடங்களிலும் கட்டு கட்டாய் பணம் வரும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பைப்பில் பணத்தை பதுக்கியிருக்கிறார் பொறியாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x