Published : 21 Nov 2021 03:06 AM
Last Updated : 21 Nov 2021 03:06 AM

இன்விட்ஸ் கடன் பத்திரங்களில் இபிஎப்ஓ முதலீடு :

அரசின் கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளையில் (இன்விட்ஸ்) 5 சதவீ தம் முதலீடு செய்வதற்கு இபிஎப்ஓ-வின் மத்திய நிர்வாக அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுபோன்ற முதலீட்டு நடவடிக்கை நிதி முதலீடு மற்றும் தணிக்கைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். பிஎப் முதலீடுகள் அனைத்தும் பொதுத் துறை நிறுவனங்களில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை தொழிலாளர் மற்றும் ஊழியர் நலத்துறை செயலர் சுநீல் பர்த்வால் தெரிவித்துள்ளார். இபிஎப்ஓ நிறுவனம் தன் னிடம் உள்ள நிதியில் 45 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையிலான தொகையை அரசு கடன் பத்திரங் களில் முதலீடு செய்யும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x