Published : 20 Nov 2021 03:06 AM
Last Updated : 20 Nov 2021 03:06 AM

கடந்த 24 மணி நேரத்தில் 11,106 பேருக்கு கரோனா தொற்று :

புதுடெல்லி

நாடு முழுவதும் 11,106 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்ப தாவது:

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 11,106 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இது நேற்று முன்தினத்தை விட 2,142 குறை வாகும். தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26,620 ஆக குறைந் துள்ளது. இது மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களில் 0.37 சதவீதமாகும்.

நாடு முழுவதும் இதுவரை 3 கோடியே 44 லட்சத்து 89,623 பேருக்கு கரோனா ஏற்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சத்து 97,912 ஆக உயர்ந்துள்ளது. தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 65,082 ஆக உள்ளது. கரோனா தொற்றுக்கு குணமடைவோர் 98.28 சதவீதமாக உள்ளது. தினசரி பாசிட்டிவ் 0.98 ஆகவும், வாராந்திர பாசிட்டிவ் 0.92 ஆகவும் உள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ம் தேதியில் இருந்து இதுவரை 115.23 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x