Published : 18 Nov 2021 03:07 AM
Last Updated : 18 Nov 2021 03:07 AM

காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை :

ஜம்மு காஷ்மீரில் இருவேறு சம்பவங்களில் நேற்று 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாம்பே, கோபால்போரா ஆகிய 2 இடங்களில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில், அப்பகுதிகளில் உள்ளூர் போலீஸாருடன் இணைந்து ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு படையினர் – தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் இரு இடங்களிலும் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட் டனர்.

கோபால்போராவில் நடந்த என்கவுன்ட்டரில் எதிர்ப்பு முன்னணி (டிஆர்எப்) என்ற தீவிரவாத அமைப்பின் கமாண்டர் அஃபக் சிக்கந்தர் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x