Published : 01 Nov 2021 03:06 AM
Last Updated : 01 Nov 2021 03:06 AM
புதுடெல்லி: பெண் சக்திக்கு சிறந்த உதாரணம் இந்திரா காந்தி என்று காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தியுள்ளனர்.
இந்திரா காந்தியின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "எனது பாட்டி தனது வாழ்நாளின் கடைசி மூச்சு வரை நாட்டுக்காக சேவையாற்றினார். அவரது வாழ்க்கை அனைவருக்கும் உந்துசக்தியாக விளங்குகிறது. அவர் பெண் சக்தியின் சிறந்த உதாரணம்" என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "தியாகம், வலிமையின் மறுஉருவம் இந்திரா காந்தி. நாட்டின் முதல் பெண் பிரதமர், இரும்பு பெண்மணிக்கு நூறு கோடி வணக்கங்களை செலுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சிறு வயதில் தனது பாட்டி இந்திராவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மரியாதை செலுத்தியுள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இந்திரா காந்திக்கு மரியாதை செலுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT