Published : 24 Oct 2021 03:06 AM
Last Updated : 24 Oct 2021 03:06 AM

24 மணி நேரத்தில் 16,326 பேருக்கு கரோனா தொற்று :

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரம் வருமாறு:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,326 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 41 லட்சத்து 59 ஆயிரத்து 562 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 9,361 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் நேற்று 666 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,53,708 ஆக உயர்ந்தது. தற்போது 1,73,728 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு மத்திய சுகாதாரத் துறை பு்ள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x