Published : 18 Oct 2021 03:09 AM
Last Updated : 18 Oct 2021 03:09 AM
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 14,416 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த 229 நாட்களுக்குப் பிறகு மிகக் குறைந்த எண்ணிக்கையாகும். அவர்களையும் சேர்த்து இதுவரை 3 கோடியே 40 லட்சத்து 67,719 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 166 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து நாடு முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 52,124 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 3 கோடியே 34 லட்சத்து 19,749 பேர் குணமடைந்துள்ளனர். குணமடை வோர் சதவீதம் 98.10 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2020 மார்ச் மாதத்தில் இருந்து இது மிக அதிகபட்சமாகும். தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 95,846 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவும் கடந்த 220 நாட்களுக்குப் பிறகு மிக குறைந்த எண்ணிக்கையாகும்.
இவ்வாறு புள்ளிவரத்தில் கூறப்பட்டுள்ளது. -பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT