Published : 14 Sep 2021 03:13 AM
Last Updated : 14 Sep 2021 03:13 AM

நாட்டில் புதிதாக 27,254 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று :

நாட்டில் புதிதாக 27,254 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரம் வருமாறு:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 27,254 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த நோயாளி கள் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 64,175 ஆக அதிகரித் துள்ளது. புதிய நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து 78-வது நாளாக 50 ஆயிரத்துக்கு குறை வாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 219 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண் ணிக்கை 4 லட்சத்து 42,655 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 10,652 குறைந்துள்ளது. தற்போது 3 லட்சத்து 74,269 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 37,697 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 24 லட் சத்து 47,032 ஆக உயர்ந்துள்ளது. வாராந்திர பாசிட்டிவ் விகிதம் 2.11 ஆக உள்ளது. இது கடந்த 80 நாட்களாக 3 சதவீதத்துக்கு குறைவாக உள்ளது. தினசரி பாசிட்டிவ் விகிதம் 2.26 சதவீதம் ஆகும். இது 14 நாட்களாக 3 சத வீதத்துக்கு குறைவாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 12,08,247 மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டுள்ளன. நாடு தழுவிய தடுப்பூசி செலுத்தும் பணியில் இதுவரை 74.38 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x