Published : 31 Aug 2021 03:12 AM
Last Updated : 31 Aug 2021 03:12 AM
உத்தராகண்ட் மாநிலம் பிதோரகார் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதுடன் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்படுகிறது. ஜூம்மா என்ற கிராமத்தில் நேற்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் இறந்தனர். இதுவரை 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் நடக்கின்றன.
முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனது ட்விட்டர் பதிவில், ‘‘நிலச்சரிவில் சிக்கியவர்களில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மண்ணில் புதைந்தவர்களை தேடும் பணியை மாநில பேரிடர் மீட்பு படை மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதிகாரிகளுக்கு தேவை யான உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டுள்ளன’’ என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT