Published : 10 Aug 2021 03:15 AM
Last Updated : 10 Aug 2021 03:15 AM

கடந்த 24 மணி நேரத்தில் 35,499 பேருக்கு கரோனா : கேரளாவில் மட்டும் 18,607 பேர் பாதிப்பு

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 35,499 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்தம் 3 கோடியே 19 லட்சத்து 69,954 பேர் கரோனாவைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் 3 கோடியே 11 லட்சத்து 39,457 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் 447 பேர் உயிரிழந்தனர். அவர்களையும் சேர்த்து இதுவரை 4 லட்சத்து 28,309 பேர் இறந்துள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ் டிராவில் ஒரு லட்சத்து 33,996 பேர், கர்நாடகாவில் 36,793 பேர், தமிழகத்தில் 34,317 பேர், டெல்லியில் 26,066 பேர், உ.பி.யில் 22,773 பேர், மேற்கு வங்கத்தில் 18,229 பேர், கேரளாவில் 17,747 பேர் இறந்துள்ளனர்.

கரோனாவில் இருந்து குணமடைவோரின்் எண்ணிக்கை 97.39 சதவீதமாக அதிகரித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 4 லட்சத்து 2,188 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு மத்திய சுகாதாரத் துறை அமைச் சகம் கூறியுள்ளது.

கேரளாவில் அதிகரிப்பு

கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் 18,607 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதுவரை கேரளாவில் 35 லட்சத்து 52,525 பேர் கரோனாவால் பாதித்துள்ளனர். தினசரி தொற்று 13.87 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 20,108 பேர் குணமடைந்துள்ள னர் என்று மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x