Published : 22 Jul 2021 03:13 AM
Last Updated : 22 Jul 2021 03:13 AM
திருமலை: திருமலை நாராயணகிரி பகுதியில் உள்ள ஏழுமலையானின் பாதங்களுக்கு (வாரி பாதங்கள்) நேற்று தேவஸ்தானத்தினர் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர்.
சப்த மலைகளில் ஒன்றான நாராயணகிரி மலையில்தான் முதன்முதலில் ஏழுமலையான் தனது பாதங்களை பதித்ததாக ஐதீகம். இந்த பாதங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ’சத்ர ஸ்தபனோற்சவ விழா’ என புதிய திருக்குடையை நாராயணகிரிக்கு ஊர்வலமாக கொண்டு சென்று, அங்குள்ள சுவாமியின் பாதங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வது வழக்கம்.
அதன்படி, நேற்று சத்ர ஸ்தபனோற்சவ விழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. புதிய திருக்குடையுடன் தேவஸ்தான அர்ச்சகர்கள், அதிகாரிகள் நாராயணகிரிக்கு சென்று வாரி பாதங்களுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், குங்குமம் போன்றவற்றால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். அப்போது திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று பாதங்களை வணங்கி வழிபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT