Published : 11 May 2021 03:11 AM
Last Updated : 11 May 2021 03:11 AM
பிஹாரின் பக்சர் மாவட்டத்தின் கங்கை நதியில் கரோனா நோயாளிகளின் உடல்கள் மிதப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநில எல்லையில் இருந்து 11 கி.மீ. தொலைவில் பிஹாரின் பக்சர் மாவட்டம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பக்சர் மாவட்டத்தின் கங்கை நதியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் மிதக்கின்றன. இதுகுறித்து நேரில் பார்த்தவர்கள் கூறும்போது, ‘‘கங்கை நதியில் சுமார் 150 உடல்கள் மிதந்து சென்றன’’ என்று தெரிவித்தனர். இதனால் பக்சர் மாவட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பக்சர் மாவட்ட உள்ளூர் அதிகாரி அசோக் குமார் கூறும்போது, "கங்கை நதியில் இருந்து இதுவரை 15 உடல்களை மீட்டுள்ளோம். யாரும் உள்ளூரை சேர்ந்தவர்கள் கிடையாது. அண்டை மாநிலமான உத்தர பிரதேசத்தில் இருந்து கங்கை நதியில் கரோனா நோயாளிகளின் உடல்களை வீசுவதாக தெரிகிறது" என்று தெரிவித்தார்.
உள்ளூர்வாசி நரேந்திர குமார் கூறும்போது, "கரோனா நோயாளி களின் உடல்களை கங்கை நதியில் வீசுவதால் பிஹார் மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. உள்ளூர் அதிகாரிகள் உடல்களை மீட்டு எரியூட்டி வருகின்றனர்" என்று தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தின் ஹமீர்பூர் பகுதியில் யமுனை நதியிலும் கரோனா நோயாளிகளின் உடல்கள் மிதக்கும் வீடியோக் கள், சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT