Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM
புதுடெல்லி: மத்திய சுகாதாரத் துறை செயலாளர் லாவ் அகர்வால் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதும் 12 மாநிலங்களில் கரோனா தொற்று கவலையளிக்கிறது. ஆந்திரா, அசாம், பிஹார், அருணாச்சல பிரதேசம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரிக்கிறது. இந்த மாநிலங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சில மாநிலங்களில் கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. எனினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இவ்வாறு லாவ் அகர்வால் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT