Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 03:13 AM
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நேற்று காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது:
நாடு முழுவதும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சூழலில் மத்திய, மாநில அரசுகள் விழித்தெழுந்து கடமைகளை நிறைவேற்ற வேண்டும். திறம்பட செயலாற்றி கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்குச் செல்வது தவிர்க்கப்பட வேண்டும். கரோனா பேரிடர் குறையும் வரை குறைந்தபட்சம் மாதந்தோறும் அவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.6,000 செலுத்தப்பட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் செய்யவேண்டும்.
கரோனா வைரஸ் தடுப்பூசியை குடிமக்கள் அனைவருக்கும் இலவசமாகவே வழங்க வேண்டும். நாடு முழுவதும் கரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதோடு, மருத்துவ ஆக்சிஜன் மற்றும் இன்னும் பிற மருந்துகளையும் போர்க்கால அடிப்படையில் தயார்நிலையில் வைக்க வேண்டும். உயிர் காக்கும் மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதைத் தடுக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் கரோனா வால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். இதுவரை பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது மிகவும் சோதனையான காலகட்டம். இந்த நேரத்தில் நாம் ஒருவொருக்கொருவர் துணையாக இருக்க வேண்டும்.கரோனாவை எதிர்கொள்ள தேசியகொள்கை வகுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT