Published : 07 Apr 2021 03:15 AM
Last Updated : 07 Apr 2021 03:15 AM

உச்ச நீதிமன்றத்தின் - புதிய தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா நியமனம் :

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும்எஸ்.ஏ. பாப்டேவின் பதவிக்காலம்வரும் 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது. தனக்கு அடுத்துமூத்த நீதிபதியாக இருக்கும் என்.வி.ரமணாவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கு எஸ்.ஏ. பாப்டே பரிந்துரைத்தார்.

இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, அவரது பெயரை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி. ரமணாவை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்நேற்று உத்தரவிட்டார். இதற்கானபணி ஆணைகளும் என்.வி. ரமணாவிடம் ஒப்படைக்கப்பட்டன. வரும்24-ம் தேதி அவர் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ளார். 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி வரை அவர் அப்பதவியில் நீடிப்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x