Published : 07 Apr 2021 03:15 AM
Last Updated : 07 Apr 2021 03:15 AM

90 வாக்காளர்களுக்கான வாக்குச் சாவடியில் 181 வாக்குகள் பதிவு :

அசாமில் இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த 1-ம் தேதி நடைபெற்றது. இதில் ஹாப்லாங் தொகுதியில் உள்ள கோத்ளிர் என்ற கிராமத்தில் 90 வாக்காளர்களுக்காக வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இங்கு 181 வாக்குகள் பதிவாகியிருந்தது.

இந்த விவகாரத்தில் கடமை தவறியதாக 5 அதிகாரிகளை மாவட்ட தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x