Published : 06 Apr 2021 03:14 AM
Last Updated : 06 Apr 2021 03:14 AM
சத்தீஸ்கரில் கடந்த சனிக்கிழமைபாதுகாப்பு படை வீரர்கள் 23 பேர்நக்ஸல் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று டெல்லியில் இருந்து சத்தீஸ்கரின் ஜகதல்பூர் நகருக்கு வந்தார். இங்கு போலீஸ்லைன்ஸ் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு படையினரின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அமித்ஷா தனது ட்விட்டர் பதிவில், “நக்சலைட்களுடன் சண்டையிடும் போது உயிர் தியாகம் செய்த துணிச்சல்மிகு பாதுகாப்பு படையினரின் துணிச்சல் மற்றும் தியாகத்தை நாடு ஒருபோதும் மறவாது. இறந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஒட்டுமொத்த நாடும் ஆதரவாக உள்ளது. நக்சல்கள் உருவாக்கிய அமைதியின்மைக்கு எதிரான தற்போதைய போரை அதன் தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு செல்லநாங்கள் உறுதியாக இருக்கிறோம். நக்ஸல் பிரச்சினைக்கு விரைவில் முடிவு கட்டப்படும்” என்று கூறியுள்ளார்.
நக்சலைட் தாக்குதலை தொடர்ந்து அப்பகுதி பாதுகாப்பு நிலவரம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் ஜகதல்பூரில் நடைபெற்றது. அமித்ஷா தலைமை யில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநிலமுதல்வர் பூபேஷ் பாகல், மாநிலகாவல்துறை மற்றும் சிஆர்சிஎப்உயரதிகாரிகள் பங்கேற்றனர்.இதையடுத்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வீரர்கள் சிலரை அமித்ஷா சந்தித்து ஆறுதல் கூறினார்.
உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதிக்கு அமித்ஷா வந்தது இதுவே முதல் முறையாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT