Published : 24 Mar 2021 03:13 AM
Last Updated : 24 Mar 2021 03:13 AM

தியாகிகள் தினம்: பிரதமர் மோடி மரியாதை :

புதுடெல்லி

தியாகிகள் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

சுதந்திரப் போராட்ட காலத்தின்போது தீரர்கள் பகத் சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரை பிரிட்டிஷ் அரசாங்கத்தினர் 1931-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி தூக்கிலிட்டனர். அந்த தினத்தையும் தியாகிகள் தினமாக மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது.

இதைத் தொடர்ந்து இந்த தியாகிகள் தினமான நேற்று பிரதமர் மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பாரதத் தாயின் புதல்வர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் தியாகம், இந்த நாட்டின் ஒவ்வொரு சந்ததியினரின் நினைவிலும் நிலைத்திருக்கும். ஜெய்ஹிந்த்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x