Published : 15 Feb 2021 03:12 AM
Last Updated : 15 Feb 2021 03:12 AM
உத்தராகண்டில் பனிப்பாறைகள்உடைந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கியவர்களில் மேலும் 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.
உத்தராகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் கடந்த 6-ம் தேதி பனிப்பாறை உடைந்து உருகியதால் தவுலிகங்கா, அலக்நந்தா ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் தவுலிகங்கா ஆற்றில் கட்டப்பட்டிருந்த பாலங்கள், அணை, ரிஷிகங்கா நீர்மின் திட்ட கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இதையடுத்து போலீஸார், பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதில் பலர் உயிருடன் மீட்கப்பட்டனர். 38 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
மேலும் 30-க்கும் மேற்பட்டோர், தபோவன் அணையை ஒட்டியுள்ள சுரங்கத்தில் சிக்கியுள்ளனர். இதையடுத்து, 12 மீட்டர் நீளம் 75 எம்.எம். சுற்றளவுள்ள தபோவன் சுரங்கத்தை மீட்புக் குழுவினர் துளையிட்டனர்.
இந்நிலையில், அதிலிருந்து 7 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. இந்த தகவலை மாநில டிஜிபி அசோக் குமார் தெரிவித்தார். இந்த சூழ்நிலையில், அப்பகுதியில் மீட்புப் பணிதீவிரமாக நடைபெற்று வருவதாக சமோலி மாவட்ட ஆட்சியர் ஸ்வாதி பதோரியா தெரிவித்துள்ளார்.
இதுதவிர ரைனி என்ற இடத்தில் நீர் மின் திட்டப் பணிகள் நடந்து வந்த ரைன் என்ற இடத்தில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 160-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என கூறப்படுகிறது. அப்பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT