Published : 14 Feb 2021 03:17 AM
Last Updated : 14 Feb 2021 03:17 AM
புதுடெல்லி: ஆண்டுதோறும் உலக வானொலி தினம் கொண்டாடுவது என கடந்த 2011-ம் ஆண்டு யுனெஸ்கோ முடிவு செய்தது. இதற்கு ஐ.நா.சபை 2012-ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. அந்த ஆண்டு முதல் பிப்ரவரி 13-ம் தேதி உலக வானொலி தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி, 10-வது உலக வானொலி தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “வானொலியில் புதுமையான மற்றும் இசை தொடர்பான நிகழ்ச்சிகளை வழங்குவோருக்கும் அதைக் கேட்போருக்கும் உலக வானொலி தின வாழ்த்துகள். சமூகத்தை இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் வானொலி மிகச்சிறந்த ஊடகம். மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் வானொலியின் சாதகமான தாக்கத்தை நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்துள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT