Published : 14 Feb 2021 03:17 AM
Last Updated : 14 Feb 2021 03:17 AM

திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் எலும்பு வங்கி தொடக்கம்

திருப்பதி: திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்தின் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (பிஐஆர்ஆர்டி – பர்டு மருத்துவமனை) எலும்பு வங்கி தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்த மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் மதன்மோகன் ரெட்டி நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எலும்பு புற்றுநோய் உட்பட எலும்பு தொடர்பான அனைத்து பாதிப்புகளுக்கும் அறுவை சிகிச்சை செய்ய எங்கள் மருத்துவமனையில் எலும்பு வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைவருக்கும் எலும்பு சிகிச்சைகளை எளிய முறையில் செய்யலாம். தற்போது மருத்துவமனைக்கு தினமும் 400 முதல் 500 வெளிநோயாளிகள் வருகின்றனர். தினமும் 25 எலும்பு அறுவை சிகிச்சை அதிநவீன முறையில் செய்யப்படுகிறது.

சென்னை, பெங்களூரு, உடுப்பி ஆகிய நகரங்களில் இருந்தும் எலும்பு மருத்துவ நிபுணர்கள் வந்து அறுவை சிகிச்சை செய்கின்றனர். இங்கு நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 48 மணி நேரத்துக்குள் அவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இவ்வாறு மதன்மோகன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x