Published : 13 Feb 2021 03:10 AM
Last Updated : 13 Feb 2021 03:10 AM

மேற்குவங்க வன்முறையை கண்டித்து திரிணமூல் எம்.பி. தினேஷ் திரிவேதி ராஜினாமா

புதுடெல்லி: மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் வரும் ஏப்ரலில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையில் திரிணமூல் கட்சியை சேர்ந்த பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

இந்த பின்னணியில் திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. தினேஷ் திரிவேதி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மாநிலங்களவையில் அவர் நேற்று பேசியதாவது:

மேற்குவங்கம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து அவையில் பேச முடியவில்லை. வன்முறையை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. மாநிலங்களவையில் எதையும் செய்ய முடியவில்லை, பேச முடியவில்லை என்றால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிடு என்று எனது ஆன்மா கூறுகிறது. இதையேற்று இன்று எனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x