Published : 10 Feb 2021 03:14 AM
Last Updated : 10 Feb 2021 03:14 AM

15 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 24 மணி நேரத்தில் கரோனா உயிரிழப்பில்லை

புதுடெல்லி: நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை எடுத்து வருகிறது. தரமான மருத்துவ மேலாண்மை நெறிமுறைகளுடன் கண்காணிப்பு, கட்டுப்பாடு, பரிசோதனை நடவடிக்கைகளினால், உயிரிழப்புகள், தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 15 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒரு கரோனா உயிரிழப்பு கூட ஏற்படவில்லை. அருணாச்சல பிரதேசம், அந்தமான் நிகோபார், திரிபுரா, தாத்ரா நாகர் ஹவேலி, நாகாலாந்து, மிசோரம், லட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கடந்த ஒரு வாரத்தில் ஒரு உயிரிழப்பு கூட பதிவாகவில்லை. மேலும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்துள்ளது என்று நிதி ஆயோக்கின் வி.கே.பால் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, “கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருவது நல்ல செய்தியாகும். கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் கரோனாவால் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x