Published : 09 Feb 2021 03:13 AM
Last Updated : 09 Feb 2021 03:13 AM
கடந்த 2004-ம் ஆண்டு முதல் இந்தியாவும் அமெரிக்காவும் ‘யுத் அப்யாஸ்' என்ற பெயரில் போர் பயிற்சியை நடத்தி வருகின்றன. கடந்த ஆண்டு அமெரிக்காவின் சியாட்டில் பகுதியில் போர் பயிற்சி நடைபெற்றது. இந்த ஆண்டு ராஜஸ்தானின் மகாஜன் பகுதியில் நேற்று போர் பயிற்சி தொடங்கியது. இதில் அமெரிக்க ராணுவ தரப்பில் 270 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதுகுறித்து இந்திய செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மாகூறும்போது, "இரு நாடுகளின்போர் பயிற்சியில் ருத்ரா, எம்-17,சினூக் உள்ளிட்ட ஹெலிகாப்டர் கள் ஈடுபடுத்தப்படும். இந்தியா, அமெரிக்காவின் அதிநவீன போர்க் கருவிகளில் வீரர்கள் பயிற்சி பெறுவார்கள். பிப்ரவரி 21-ம் தேதி வரை போர் பயிற்சி நடைபெறும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT