Published : 07 Feb 2021 03:13 AM
Last Updated : 07 Feb 2021 03:13 AM
புதுடெல்லி: விவசாயிகள் நடத்தி வரும் அமைதியான போராட்டம் தேச நலனில் அக்கறை கொண்ட ஒரு போராட்டம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் நேற்று நாடு தழுவிய மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்துக்கு முன்னதாக ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “நாட்டுக்கு உணவளிப்பவர்களின் அமைதியான சத்தியாகிரகம் தேச நலனில் அக்கறை கொண்ட ஒரு போராட்டமாகும். இந்த 3 சட்டங்களும் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியதாகும். எனவே விவசாயிகளின் போராட்டத்துக்கு நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம்” என்று கூறியிருந்தார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா தனது ட்விட்டர் பக்கத்தில் விவசாயிகளின் போராட்டக்களம் ஒன்றில் காவல்துறை அமைத்துள்ள பல அடுக்கு தடுப்புகளின் புகைப்படத்தை வெளியிட்டார். அந்தப் படத்துடன், “பயத்தின் சுவரால் எங்களை ஏன் பயமுறுத்துகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT