Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM

கேரளாவில்6,268 பேருக்கு கரோனா தொற்று

நாடு முழுவதும் நேற்று 18,855பேருக்கு கரோனா வைரஸ்தொற்று உறுதி செய்யப்பட்டது.இதுவரை 1,07,20,048 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,03,94,352 பேர் குணமடைந்துள்ளனர். தேசிய அளவில் 96.96 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மருத்துவமனைகளில் 1,71,686 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 163 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,54,010 ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவில் நேற்று 6,268 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. நாட்டில் மிக அதிகபட்சமாக அந்த மாநிலத்தில் 72,239 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x