Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM
நாட்டில் 8 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக தினசரி கரோனா தொற்று 10,000-க்கு கீழ் குறைந்துள்ளது.
கேரளாவை தவிர்த்து இதர மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் தினசரி தொற்று ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது. ஆந்திரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் நாள்தோறும் நூற்றுக்கும் குறைவான மக்களே கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.
நாடு முழுவதும் நேற்று 9,102 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. எட்டு மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக தினசரி கரோனா தொற்று 10,000-க்கு கீழ் குறைந்திருக்கிறது.
இதுவரை 1,06,76,838 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,03,45,985 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 1,77,266 பேர் சிகிச்சை பெறுகின்றனர். நாடு முழுவதும் நேற்று 117 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,53,587 ஆக அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT