Published : 26 Jan 2021 03:17 AM
Last Updated : 26 Jan 2021 03:17 AM
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதில் இருந்து 5 ஆண்டுகளுக்கு மாநிலங்கள் சந்திக்கிற வரி வருவாய் இழப்பை மத்திய அரசு வழங்கும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் 2020-ல் வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.1.10 லட்சம் கோடியாகக் கணிக்கப்பட்டது.
கரோனா வைரஸ் பரவலால் வர்த்தகம் முடங்கியதால் மத்திய அரசு சிறப்பு சாளர முறையில் கடனாகப் பெற்று இந்த நிதியை வழங்க முடிவு செய்தது. அதன்படி மாநிலங்களுக்கு தவணை முறையில் வாரம் ரூ.6,000 கோடி வீதம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதுவரை 13 தவணைகளாக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 70 சதவீதம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT