Published : 23 Jan 2021 03:15 AM
Last Updated : 23 Jan 2021 03:15 AM

கர்நாடக மாநில ஷிமோகாவில்கல்குவாரி வெடி விபத்தில் 8 பேர் பலி

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம் ஹூன்சுடு என்ற இடத்தில் இயங்கி வந்த தனியார் கல் குவாரியில் வெடிப்பொருட்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் வெடித்தது. இதனால் நிலநடுக்கம் ஏற்பட்டதாக மக்கள் பீதி அடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த‌ தேசிய பேரிடர் மீட்பு படையினர் படுகாயம் அடைந்த 15-க்கும் மேற்பட்டோரை மீட்டு, ஷிமோகா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஷிமோகா மாவட்ட ஆட்சியர் சிவகுமார் கூறும்போது, ‘‘ஜெலட்டின் குச்சிகள் வெடித்த‌ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். குவாரியின் உரிமையாளர், வெடிப்பொருள் விற்பனையாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x