Published : 23 Nov 2020 03:11 AM
Last Updated : 23 Nov 2020 03:11 AM
மருத்துவமனைகளில் 4,40,962 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 501 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,33,277 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் புதிதாக 5,760 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 80,878 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகாவில் புதிதாக 1,781 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 24,733 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆந்திராவில் புதிதாக 1,160 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. மாநிலத்தில் 14,770 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரளாவில் நேற்று 5,254 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் 65,856 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உத்தர பிரதேசத்தில் 2,235 பேர், டெல்லியில் 5,879 பேர், மேற்குவங்கத்தில் 3,639 பேர், ஒடிசாவில் 778 பேர், தெலங்கானாவில் 873 பேர், ராஜஸ்தானில் 3,007 பேர், சத்தீஸ்கரில் 2,284 பேர், ஹரியாணாவில் 2,666 பேர், குஜராத்தில் 1,515 பேர், மத்திய பிரதேசத்தில் 1,700 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT