Published : 20 Nov 2020 03:14 AM
Last Updated : 20 Nov 2020 03:14 AM

டெல்லியில் முகக்கவசம் அணியாவிட்டால் விதிக்கப்படும் அபராதம் ரூ.2,000 ஆக உயர்வு

புதுடெல்லி: டெல்லியில் முகக்கவசம் அணியாவிட்டால் விதிக்கப்படும் அபராதத் தொகை ரூ.500-லிருந்து ரூ.2,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

நாட்டின் பிற பகுதிகளில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், டெல்லியில் கடந்த 3 வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக முகக்கவசம் அணியாதோருக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.500-லிருந்து ரூ.2 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கரோனா நோயாளிகளுக்காக அவசர சிகிச்சை படுக்கை வசதியை கூடுதலாக ஏற்பாடு செய்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பொது இடங்களில் முகக்கவசங்களை வழங்க அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x